அனைத்து அரச நிறுவனங்களிலும் டெங்கு பரிசோதனை
அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால், எதிர்வரும் 24ம் திகதி பரிசோதனை மேற்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து இராஜாங்க மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களுக்கும், அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார். இதன்படி, அன்றையதினம் குறித்த அமைச்சுகளாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களையும் அப் பகுதிக்கு

