அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது

278 0

DSC02973அரசியல்வாதிகளுக்குள் பிரச்சனைகளால் வடமாகணத்தில் இருந்து பணம் திரும்புகின்றது என  வடமாகாண ஆளுநர் ரெயிநோல்ட் குரே தெரிவித்தார்

இன்றைய தினம் சிவில்ப்பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான  இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றபொங்கல் விழாவில் பிரதம  விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில் அரசியல்வாதிகளுக்குள் இருக்கும் பிரச்சனைகளால் வட  மாகாணத்திற்கு வரும் பணங்கள் செலவழிக்காமல் திரும்பிச்செல்கின்றது குறிப்பாக  இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய  தொகைப்பணம் வந்தது ஒண்டும் செய்யவில்லை அதுமட்டுமல்ல மாங்குளம் பகுதியில்  பொருளாதார மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்கும் பணம் வந்தது அதுக்கும் திரும்பிப் போனது ஒன்றும் செய்யாமல் எனத்தெரிவித்தார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் வாக்குவாதங்கள் இல்லாது அணைவரும் சேர்ந்து மக்களுக்கு வேலைசெய்ய வேண்டும் நான் இனவாத அரசியல் செய்யவில்லை நாம் இன மத கட்சி வேறுபாடின்றி இணைந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி நோக்கி கொண்டுசெல்லமுடியும்   
 
நமது கடவுள் எல்லாம் தமிழ் சிங்கள வேறுபாடின்றி ஒன்றாக ஒற்றுமையாக இருக்கின்றனர்   அரசியல் பிரமுகர்களும் தமிழ் சிங்கள வேறுபாடின்றி திருமணம் செய்து ஒன்றாக இருக்கின்றனர்
நாம் சண்டைபிடிக்க ஒரு கரணம் கூட இல்லை நாம் அனைவரும் ஒற்றுமையாக செயற்ப்பட வேண்டும்
இராணுவத்தினர் கூட புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளார்கள் இப்பொழுது உள்ள இராணுவம் யுத்ததுக்கானது அல்ல பொலிசாரும்  அவ்வாறே அனைவரும் மக்களுக்கானவர்கள் அதேபோல் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் அதுவே நல்லிணக்கம் என  தெரிவித்தார்
அத்துடன் சிவில்ப்பாதுகாப்பு திணைகளத்தில் வேலைசெய்யும் தாய்மார்களது குழந்தைகளை பராமரிப்பதற்கான பராமரிப்பகத்தை அமைக்க தனது சொந்தப்பணத்தில் இருந்து இரண்டு இலட்சம்   தருவதாகவும் உறுதியளித்தார்.
DSC02973 DSC02974