வரட்சியினால் யாழில் 17,265 குடும்பங்கள் பாதிப்பு
வரட்சி காரணமாக யாழ்.மாவட்டத்தில் 8,160 ஹெக்ரெயர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட பயிர்கள் அழிந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் 17,265 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரட்சி மீட்புத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. இதன்போதே இந்தத் தகவல்களை அவர் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில்இவ்வருடம் 10,419 ஹெக்ரயரில் நெல் பயிரிடப்பட்டது. இதில்

