பல்கலைக்கழக மாணவர்கள் 07 பேர் விளக்கமறியலில்

276 0

juvenile-offenders_0_1_1_2_0_0கொள்ளுப்பிட்டி, சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களினால் நடத்தப்பட்ட ஆர்பாட்டத்துடன் தொடர்புடைய 04 பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட 07 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் பல்கலைக்கழக மாணவி ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாணவர்கள் கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்படு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.