ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒட்டியிருக்கும் வரையில் கூட்டுச் சேர்தல் என்பது சாத்தியமற்றது-பிரசன்ன ரணதுங்க

Posted by - January 22, 2017

நாட்டிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையானவர்கள் மஹிந்த ராஜபக்ஷவுடன்தான் இருக்கின்றார்கள் என்பதை இன்றைய சந்திப்பின் போது மாகாண முதலமைச்சர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் மாகாண  முதலமைச்சர்கள் இன்று  காலை நடாத்திய கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபுர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற  இக்கலந்துரையாடலில் மஹிந்த ராஜபக்ஷவின் குழு சார்பாக பிரசன்ன

மஹிந்த ராஜபக்ஷவை நெருங்கும் றோ

Posted by - January 22, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய உளவு அமைப்பான றோவை சேர்ந்த பிரதிநிதி ஒருவர் சந்தித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது மஹிந்தவுக்கு அரசியல் ரீதியாக சில அழுத்தங்களை பிரயோகித்ததாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இருவருக்கும் இடையிலான சந்திப்பின் போது, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என றோ பிரதிநிதி கேட்டுள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலிலிருந்து ஓய்வு பெற தயாராக இருப்பதாக மஹிந்த தெரிவித்துள்ளார். எனினும் தனது குடும்ப உறுப்பினர்கள் கைது

ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - January 22, 2017

கொட்டகலை – ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, அத்தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் நலத்தில் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்பதை கண்டித்து இடம்பெற்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்தார். அதேபோன்று நேற்று குளவி கொட்டுக்கு இழக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - January 22, 2017

கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

அரசாங்கத்தை பதவி விலக கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் பௌத்த துறவி!

Posted by - January 22, 2017

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பெண் பௌத்த துறவி ஒருவர் கண்டி தலதா மாளிகைக்கு எதிரில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள பேச்சுவார்த்தை-ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

Posted by - January 22, 2017

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 25 பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான முறையில் நகர்ந்து வருவதாகவும் இவர்கள் கூடிய விரைவில் எதிர்க்கட்சியுடன் இணைய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த அரசாங்கத்தில் வர்த்தகதுறை அமைச்சராக

யாழ்ப்பாணம் எழுவைதீவில் இறங்குதுறை(காணொளி)

Posted by - January 22, 2017

யாழ்ப்பாணம் எழுவைதீவில் கடற்படையினரால் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம் எழுவைதீவிற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 7.3 மில்லியன் ரூபாவில் கடற்படையினரால் அனலைதீவில் இறங்குதுறை அமைக்கப்பட்டு வருகின்றது. கடற்படையினால் அமைக்கப்பட்டுவரும் இறங்குதுறையில் 80 வீதத்திற்கு மேற்பட்ட வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கடலுக்கு செல்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Posted by - January 22, 2017

கடலோர பகுதிகளான கொழும்பு, புத்தளம்,மன்னார், பலப்பிட்டிய, மற்றும் காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில்,ஒரு மணித்தியாலத்திற்கு காற்றின் வேகம் 60 கிலோமீற்றராக அதிகரிக்க கூடும் என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க உள்ளமையால், மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளின் ஈடுபடுபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதனை தவிர ஏனைய பிரதேசங்களின் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகம் வரை அதிகரிக்கலாம் எனவும் இதனால்,

”இவர் இல்லாமல் தமிழருக்கு எப்படி உணர்வு வரும்”

Posted by - January 22, 2017

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டங்கள் மேலோங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் மெரினா கடற்கரையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பிரபல்யமாக பார்க்கப்படுகின்றது. மெரினா கடற்கரையோரத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பெண்ணொருவர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்துடன் போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவர் இவரின் உருவப்படத்துடன் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஏன் கலந்து கொள்கிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு குறித்தப் பெண் ”இவர் இல்லாமல் தமிழருக்கு உணர்வு எப்படி வரும்” என பதிலளித்துள்ளார். இச்சம்பவத்துடன் தொடர்புடைய

ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்(படங்கள்)

Posted by - January 22, 2017

நுவரெலியா ஹட்டன் நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலையை அண்டிய அரச காணிகள் மற்றும் பொது இடங்களை, பிறமாவட்ட மக்கள், வெளியார்கள் ஆக்கிரமித்து வருவதை அப்பகுதி கிராம சேவகர் ஒருவர் கண்டுக்கொள்வதில்லை என எதிர்ப்பு தெரிவித்து, பிரதேசவாசிகள் இன்றுஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஹட்டன் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பட்டத்தில், நல்லதண்ணி பிரதேசத்தில் சிவனொளிபாதமலை பகுதியில் பருவகால நிகழ்வின்போது, வருகைதரும் வெளியார்கள் பொது இடங்கள் மற்றும் அரச காணிகளை ஆக்கிரமித்து கொள்வதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த