ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

256 0

கொட்டகலை – ஸ்டோனிகளிப் தோட்ட தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஸ்டோனிகிளிப் தோட்டத்தின் தொழிற்சாலைக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டமானது, அத்தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் நலத்தில் தோட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை என்பதை கண்டித்து இடம்பெற்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழந்தார்.

அதேபோன்று நேற்று குளவி கொட்டுக்கு இழக்காகி ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தோட்ட தொழிலாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேயிலை மலைகளில் காணப்படும் குளவி கூடுகளை அகற்றுவதற்கு இத்தோட்ட மக்கள் பலமுறை தோட்ட நிர்வாக அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்த போதிலும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று தமது எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் தொழில் பகிஷ்கரிப்பிலும் ஈடுப்பட்டுள்ளனர்.

தோட்ட தேயிலை மலைகளில் உள்ள குளவி கூடுகளை அகற்றுவதற்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.