வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன் நாளை கவனயீர்ப்பு போராட்டம்!

267 0

கடந்த 10.01.2017 வெளிமாவட்டத்தில் பணியாற்றிய ஆசிரியர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய மூன்று ஆசிரியர்களுக்கு வடமாகாணக் கல்விப்பணிப்பாளரால் வழங்கப்பட்ட ஜனநாயக விரோத “பணித்தடை” உத்தரவை விலக்கி ஆசிரியர்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளது.

நாளை திங்கட்கிழமை காலை 9 மணிக்கு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் செயலகம் முன்பாகக் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.

அத்துடன் இந்தக் கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்கும் வரை ஜனநாயக ரீதியான இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்போராட்டத்தில் பங்குகொண்டு பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு அனைத்து ஆசிரியர்களும் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் அழைப்பு விடுத்துள்ளார்.