அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது

Posted by - January 25, 2017

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி விட்டு தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது என்பதை முழு நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ள விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஏழு முஸ்லிம் நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை-டொனல்ட் டிரம்ப்

Posted by - January 25, 2017

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் முகமாக ஏழு நாடுகளின் மக்களுக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக டொனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வகையில், ஈரான், ஈராக், சிரியா, லிபியா, யமன், சூடான் மற்றும் சோமாலியா போன்ற நாடுகளின் மக்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கும் அந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதவாறு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இந்த தீர்மானம் டிரம்பின் தேர்தல் வாக்குறுதியாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அத்துடன், அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் அமைக்கப்பட்டு வரும் மதில்

கடற்படைக்கு புதிய ஊடகப் பேச்சாளர்

Posted by - January 25, 2017

இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளராக லேப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுளுகே நியமிக்கப்பட்டுள்ளார்.முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் அக்ரம் அளவி இன்று சேவையிலிருந்து ஓய்வு பெற்று சென்றுள்ளார்.குறித்த வெற்றிடத்தை நிரப்பவே புதிய ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனமும்

Posted by - January 25, 2017

சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டமானது போராடுபவர்களின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது என மன்னார் பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா செபமாலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு-லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

Posted by - January 25, 2017

இணக்கப்பாட்டு அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டு அதன் அடையாளத்தை பாதுகாப்பது மாத்திரமல்ல மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது தமது பொறுப்பு என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் மாற்றம் செய்ய வேண்டிய ஏதாவது இருக்குமாயின் அதற்காவும் மக்களின் ஏதேனும் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமாயின் அதற்காக இணைந்து செயற்பட்டு வருகின்றோம். மத்திய வங்கியின் பிணை

ஷிரந்தி ராஜபக்ஷவின் செயற்பாடு! குற்றப் புலனாய்வு பிரிவினர் தீவிரம்!!

Posted by - January 25, 2017

கொலை செய்யப்பட்ட ரகர் வீரர் வசீம் தாஜுடீன் கொலை செய்யப்பட்ட இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்- ரணில்

Posted by - January 25, 2017

அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தி, நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்து, அதிகாரத்தைப்பகிர்வதற்காக அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக அரசியல் அமைப்பு சபைநிறுவப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று இடம்பெற்ற இளைஞர் நாடாளுமன்றத்தின்முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத்தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், நாட்டில் பல தசாப்தங்களாக நிலவிய யுத்தத்தினால் பொருளாதார அபிவிருத்திக்கும்பாதிப்பு ஏற்பட்டது. இனங்களுக்கிடையிலான வேற்றுமையினால் நாடு பின்நோக்கித் தள்ளப்பட்டதாகவும்,யுத்தத்தின் பின்னரும் எதிர்ப்பார்க்கப்பட்ட வெற்றிகளை அடைந்து

ஜெனிவா யோசனையை காலம் கடத்த அரசுக்கு உதவும் தமிழ் அரசியல்வாதிகள்!!

Posted by - January 25, 2017

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக யோசனை ஒன்று நிறைவேற்றப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், அந்த யோசனையின் எந்த பரிந்துரையையும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு வடக்கு, கிழக்கு கடற்பரப்பை வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது- சம்பிக்க ரணவக்க

Posted by - January 25, 2017

தேசப்பற்றாளர்கள் என கூறிக்கொண்டு தற்போது மார்பில் அடித்து கொள்வோர் இதற்கு முன்னர் சமஷ்டி அரசியலமைப்புச் சட்டத்தை தயாரித்தவர்கள் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கண்டி தலதா மாளிகையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். சுனாமி ஏற்பட்ட நேரத்தில் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை விடுதலைப் புலிகளுக்கு வழங்க அன்றைய அரசாங்கம் முயற்சித்தது. இப்போது தம்மை இன நேசர்கள் எனக் கூறிக்கொள்வோர் அப்போது பின்நோக்கி சென்று மறைத்து கொண்ட நேரத்தில் உயிர்

உண்ணாவிரதிகளின் உடல்நிலை மோசம்

Posted by - January 25, 2017

வவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார். உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர் குழு உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னரே இவ்வாறு தெரிவித்தார். இந் நிலையில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும் இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். இந் நிலையில் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு வந்து