இலங்கையின் கடனை செலுத்த வருடம் 400 கோடி டொலர் தேவை!!

Posted by - January 26, 2017

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தலா 400 கோடி டொலர் பணம் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கைக்கு என்ன நடக்கப்போகின்றது?

Posted by - January 26, 2017

திருமதி மனோரி முத்வெட்டுகம தலைமயில் உருவாக்கப்பட்ட போர்க் குற்றம் தொடர்பான நல்லிணக்க பொறிமுறைகள் கலந்தாலோசனைச் செயலணி தனது அறிக்கையை கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பித்திருந்தது

ஜல்லிக்கட்டு போராட்டம் – வன்முறையை செலுத்தியது அரசும் காவல்துறையுமே.

Posted by - January 25, 2017

ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீதும், மக்கள் மீதும் திட்டமிட்டு அரசும், காவல்துறையுமே வன்முறையை செலுத்தியது. தொடர்ந்து வன்முறைகளை நிகழ்த்தி வருகிறது. மாணவர்களையும், இளைஞர்களையும் பாதுகாத்த மீனவப் பகுதிகள் மற்றும் மெரீனாவின் சுற்றுவட்டப் பகுதியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்கியும், வழக்குகளை பதிவு செய்தும் வருகிறது. மேலும் மக்களுடன் போராட்டத்தில் நின்ற மே பதினேழு இயக்கம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட அமைப்புகளை சமூக விரோதிகள் என்று அவ்தூறு பரப்பியிருக்கிறார் கோவை காவல்துறை ஆணையர் அமல்ராஜ்.

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை

Posted by - January 25, 2017

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு

Posted by - January 25, 2017

டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ள, உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளது.

8ஆவது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் நாள் யாழில் நடைபெறும்!

Posted by - January 25, 2017

எட்டாவது சர்வதேச வர்த்தகக்  கண்காட்சி எதிர்வரும் 27ஆம் நாள் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென பந்தல்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்(காணொளி)

Posted by - January 25, 2017

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். நேற்றையதினம் ஊர்காவற்றுறை சுருவிலில் உள்ள வீடொன்றில் தனிமையிலிருந்த ஏழு மாதக்கற்பிணிப்பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் இரும்புகள் சேகரிக்கச் சென்றவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைதாகியிருந்தனர். கைதுசெய்யப்பட்ட உரும்பிராய் மற்றும் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில்ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

வவுனியாவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருகின்றது(காணொளி)

Posted by - January 25, 2017

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர் குழுவிலுள்ள வைத்தியர் ஒருவர், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னர் இவ்வாறு தெரிவித்தார். உண்ணாவிரதப் போராட்டத்தில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும், இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் குறித்த