யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்(காணொளி)

391 0

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் நேற்று இடம்பெற்ற கர்ப்பிணிப்பெண் கொலை தொடர்பில் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

நேற்றையதினம் ஊர்காவற்றுறை சுருவிலில் உள்ள வீடொன்றில் தனிமையிலிருந்த ஏழு மாதக்கற்பிணிப்பெண் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த கொலைச்சம்பவம் தொடர்பில் இரும்புகள் சேகரிக்கச் சென்றவர்கள் என சந்தேகிக்கப்படும் இரு வியாபாரிகள் யாழ்ப்பாணம் பொலிசாரால் கைதாகியிருந்தனர்.

கைதுசெய்யப்பட்ட உரும்பிராய் மற்றும் சுழிபுரத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் இன்று மாலை ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில்ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் பெப்ரவரி 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் யாழ்ப்பாண சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியல் காலம் நிறைவடையும் பெப்ரவரி 8ஆம் திகதி கர்ப்பிணி பெண்ணை கொலை செய்யும் வேளையில் கண்ணால் கண்ட சாட்சியமாக கருதப்படும் வாய்பேசமுடியாத சிறுவன், சந்தேகநபர்களை அடையாளம் காட்டும் வகையில் அடையாள அணிவகுப்பு ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் ஒழங்குசெய்ய வேண்டும் என்றும் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எம்.எம்.றியால் உத்தவிட்டார்.