இலங்கையின் கடனை செலுத்த வருடம் 400 கோடி டொலர் தேவை!!

261 0

இலங்கை பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் தலா 400 கோடி டொலர் பணம் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று நடைபெற்ற நான்காவது இளையோர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப கூட்டத் தொடரில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் முழு வெளிநாட்டு வருமானத்தை கவனத்தில் கொண்டாலும் அந்த கடனை செலுத்த வருமானம் போதுமானதல்ல.

மேலும் 2016 முதல் 2026 ஆம் ஆண்டு வரை இலங்கை பெரும் தொகையான கடனை செலுத்த வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.