ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு தற்போதைய சமூகத்திற்கு அவசியமானது- மைத்திரிபால சிறிசேன

Posted by - January 27, 2017

நாட்டின் பொருளாதாரத்தையும், ஒழுக்கமான சமூகத்தையும் கட்டியெழுப்பும் பணிகளில் சுங்க திணைக்களத்தின் செயற்பணி பரந்துபட்ட எல்லைகளுக்குள் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பயனுள்ள தேச வரைறைகளின் முகாமைத்துவத்திற்கான தரவுப் பகுப்பாய்வு என்ற தொனிப்பொருளில் சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடும் வகையில் இலங்கை சுங்க திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, ஊழல், மோசடி மற்றும் வீண்விரயம் பற்றிய விழிப்புணர்வு கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த தபால் ரயில் விபத்துக்குள்ளாகியது

Posted by - January 27, 2017

கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்குஅருகில் விபத்துக்குள்ளானது. கொழும்பு கோட்டை நோக்கி நேற்றிரவு பயணித்த தபால் ரயில் தலாவ புகையிரத நிலையத்திற்று அருகில் விபத்துக்குள்ளாகி சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில் கட்டுபாட்டு அறை தெரிவித்துள்ளது. தபால் ரயில பயணித்த தண்டவாள பகுதியில் ஏற்பட்டுள்ள தடங்கல் காரணமாகவே ரயில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் சாரதி மற்றும் ரயில் பாதுகாவலர் தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை- சிறிசேன

Posted by - January 27, 2017

மாணவர்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லையாயின் எந்தவொரு விடயத்திலும் பயனில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித்துறையில் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை உள்ளடக்கிய கல்வி தொடர்பான தேசிய கொள்கை முன்மொழிவுகள் ஜனாதிபதியிடம் நேற்று கைளியிக்கப்பட்டன. ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து தேசிய கொள்கை முன்மொழிவுகள், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன. கல்விக்கொள்கைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவும் தேசிய கல்வி நிறுவனமும் இணைந்து ஆய்வினை மேற்கொண்டன. ஆய்வின் அடிப்படையில் தேசிய கொள்கை

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Posted by - January 27, 2017

மட்டக்களப்பில் மழையால் பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் அங்கு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்ததுடன், மட்டக்களப்பில் பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்படடுள்ள படுவான்கரை பிரதேச மக்கள் அனைவருக்கும் பாரபட்சம்பாராது நிவாரணங்களை வழங்க நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கிரான் மற்றும் செங்கலடி, வெல்லாவெளி, பட்டிப்பளை,

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று- சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர்

Posted by - January 27, 2017

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தவறான புரிதல் காரணமாக ஏற்பட்ட ஒன்று என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்தில் சீனாவின் தொழில் முயற்சிகளுக்கு மட்டும் சந்தர்ப்பம் வழங்குமாறு ஒரு போதும் இலங்கை அரசாங்கத்திடம் சீனா கோரவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் மக்கள் சரியான முறையில் அறிவுறுத்தப்படாத காரணத்தால் இந்த நிலமை ஏற்பட்டதாக பீஜிங் நகரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின்

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது- பைஸர் முஸ்தபா

Posted by - January 27, 2017

பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் இனங்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் நல ஆலோசனைக்கான ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அமைச்சர் பைஸர் முஸ்தபா, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள், மருத்துவமனைகள், பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பொது வர்த்தக கட்டடங்கள் ஆகியவற்றுக்கு அண்மையில், நாய்களை கொண்டுவந்து விடுவதால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருவதாக பிரதேச மக்கள் முறையிடுவதாக கூறினார். பொது இடங்களில், நாய்களை கொண்டுவந்து விடுபவர்களை, சி.சி.டி.வி கமெராக்களின் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிட்டுள்ளார்- மலிக் சமரவிக்ரம

Posted by - January 27, 2017

அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஹொரணை வகவத்தை கைத்தொழில் வலயத்திற்கு இறப்பர் தொழிற்சாலைக்காக அரச காணி குத்தகைக்கு வழங்கப்படுவது தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன் தவறான கருத்தை வெளியிட்டிருப்பதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். குறித்த தொழிற்சாலைக்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் ஒரு ஏக்கர் நிலம் சிறிய தொகை பணத்திற்காக குத்தகைக்கு வழங்கப்பட்டிருப்பதாக அமைச்சர்

ஆதன வரியை இம்மாதம் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும்- யாழ் மாநகர சபை

Posted by - January 27, 2017

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 10 வீத கழிவினை பெற்றுக்கொள்ள முடியும் என யாழ் மாநகர சபை அறிவித்துள்ளது. ஆதன வரியை இம்மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்த முடியாதவர்கள், காலாண்டுக்கான ஆதனவரியை குறித்த காலாண்டின் முதலாம் மாதம் 31ஆம் திகதிக்குள் செலுத்துவதன் மூலம் 5 வீதக் கழிவினையும் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாநகர சபையினர் அறிவித்துள்ளனர். வரியிறுப்பாளர் நலன்கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், பொது விடுமுறை தினங்களிலும்

வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் (காணொளி)

Posted by - January 27, 2017

வவுனியாவில் கடும் மழை பெய்துவருவதால், மன்னார் வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து, மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வேப்பங்குளம் 6ஆம் வீதியில் உள்ள 10 குடும்பங்களின் வீட்டிற்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளதால் அக்குடும்பங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையினால் திருநாவற்குளம் பகுதியிலும் சில வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. மன்னார் வீதியிலிருந்து பூங்கா வீதிக்குச் செல்லும் வீதி வெள்ளத்தில்

ஹட்டன் இந்துமா சபை வீதியில் விபத்து(காணொளி)

Posted by - January 27, 2017

நுவரெலியா ஹட்டன் இந்துமா சபை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை மாணவி ஹட்டன் இந்துமா சபை வீதியைக் கடக்க முயன்றபோது, ஆட்டோ ஒன்றுடன் மோதியுள்ளார். சம்பவத்தையடுத்து, ஆட்டோவின் சாரதியைக் கைது செய்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேரடியாக இடம்பெறும் சம்பவம், அருகில் இருந்த மண்டபம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமாராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.