டெங்கு நோயை ஒழிக்க புதிய செயற்திட்டம் – ஜனாதிபதி

Posted by - January 31, 2017

டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக புதிய செயற்திட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்த புதிய செயற்திட்டம் வெற்றிபெறுவதற்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய பல் போதனா மருத்துவமனைக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களைப் பாதுகாப்பதற்காக சுகாதார துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்கள்

நாமல் ராஜபக்ஸ 15ஆம் திகதி ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

Posted by - January 31, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளனர். பல தடவைகள் அவரை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகாததன் காரணமாக, கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அபகீர்த்திக்கு உள்ளாவதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்தார். இந்த வழக்கு

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - January 31, 2017

எப்பாவல – கட்டியாவ பிரதேசத்திலுள்ள பழங்கால கால்வாயில் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்க பெற்ற தகவல்களுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் காவற்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Posted by - January 31, 2017

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சரால் இந்த குழு அமைக்கப்பட்டது வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண சபையின் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சிகளினால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை அடுத்து வடமாகாண முதலமைச்சரினால் விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. இந்தநிலையில் குழுவின் விசாரணைக்குழுவின் காலத்தை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கவேண்டும் என்று வடமாகாணசபையின் அமர்வின்போது கோரிக்கை

நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை – விந்தன் கனகரட்ணம் (காணொளி)

Posted by - January 31, 2017

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.

மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

Posted by - January 31, 2017

மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் இதனைத் தெரிவித்தார். மன்னார் – பேசாலை பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து மலேரியா நோய் பரப்பும் இந்த நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டது. மலேரியா நோய் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த நுளம்பு இனம், நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியுள்ளதா? என்பது குறித்து

மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா(காணொளி)

Posted by - January 31, 2017

  மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையில் மதரீதியாகவும் கலாசார ரீதுயாகவும் ஒன்றிணைந்து கொண்டாடும் தைப்பொங்கல் விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று  நடைபெற்றது. ஏறாவுர்பற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமையில்  பொங்கல் விழா நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் கலந்துகொண்டு கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழாவை

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017

  நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் 83 ஆவது அமர்வு அவைத்தலைவர் சி.சி.கே.சிவஞானம் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலம் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை- அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - January 31, 2017

நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று வடக்கு மாகாணசபையில் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். இன்று நடைபெற்ற வடக்கு மாகாண சபை அமர்வின்போது குறித்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கை செயற்படாது

Posted by - January 31, 2017

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையின் தரையிலோ கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவுக்கும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று டில்லியில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே இலங்கை கடற்படைத் தளபதியால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார காரணங்களுக்காகவே சீனா, இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படைத் தளபதி இந்தச் சந்திப்பின்போது கூறியுள்ளார். சீனாவின் முதலீட்டின் கீழ் அமைக்கப்படும் கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு