இந்தியாவின் நலனுக்கு எதிராக இலங்கை செயற்படாது

241 0

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கையின் தரையிலோ கடலிலோ எந்தச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தனவுக்கும் இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று டில்லியில் நேற்று இடம்பெற்றது.

இதன்போதே இலங்கை கடற்படைத் தளபதியால் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார காரணங்களுக்காகவே சீனா, இலங்கையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கடற்படைத் தளபதி இந்தச் சந்திப்பின்போது கூறியுள்ளார்.

சீனாவின் முதலீட்டின் கீழ் அமைக்கப்படும் கொழும்பு நிதி நகரத்தின் பாதுகாப்பு இலங்கை கடற்படை வசமே இருக்கும்.

சீனாவின் பாதுகாப்பில் அந்த நிதி நகரம் இருக்கும் என்று பரப்பப்படும் தகவல்களில் உண்மையில்லை என்று இலங்கையில் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.