தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்
வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அண்மையில் எனது நண்பர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, என்னை

