புலம்பெயர் தமிழர்களின் பணத்திற்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படவில்லை என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை சூரியவௌ பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வெலிவௌ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் மக்களின் பணத்தைக் கொண்டு வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் தேவைக்காக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கி வருவதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
பௌத்த மதத்திற்கான முன்னுரிமையை இல்லாமல் செய்யவோ, நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் ஏற்படுத்தவோ எவ்வித அவசியமும் கிடையாது.
பௌத்த மதத்திற்கு உச்சளவு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நல்லாட்சி அரசாங்கத்துடன் கடும் கோபம் கொண்டுள்ள புலம்பெயர் சமூகத்துடன் இணைந்து அரசியல் அமைப்பு திருத்தங்கள் செய்யப்படாது.
ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் மட்டும் அரசியலமைப்பு திருத்தி அமைக்கப்படவுள்ளது.
சூரியவௌ சர்வதேச கிரிக்கட் மைதான நிர்மாணப் பணிகளின் போது பாரியளவு மோசடி இடம்பெற்றுள்ளது என அமைச்சர் பிரேமதாச தெரிவித்துள்ளார்.