தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம்

237 0

தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு புதிதாக மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

நாடுமுழுவதுமுள்ள 19 கல்வியற் கல்லூரிகளில் 27 கற்கை நெறிகளுக்காக இந்த நேர்முகத் தேர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த முறை 4 ஆயிரத்து 69 பேர் கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.