தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளது-சீ.வி.விக்னேஸ்வரன்

252 0

வடக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடாமல் கூட்டங்களிலும் விளையாட்டுப் போட்டிகளின் போதும் “நாம் அனைவரும் இலங்கையர்” என்று கூறுவது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் கருத்துக்கு பதில் வழங்கும் முகமாகவே அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தேடிப்பார்த்து அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அண்மையில் எனது நண்பர் அமைச்சர் தயாசிறி ஜயசேகர, என்னை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும், அடித்து விரட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.

தன்னை அடித்து விரட்டினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளை கூற, உண்மையை கூற ஒருவர் இல்லையென்று கூற முடியாது. நாம் கூறுவது உண்மையே. நான் கூறினாலும் வேறொருவர் கூறினாலும் உண்மை உண்மையே.

நாட்டை ஒன்று சேர்ப்பதற்கு சிறந்த முறை பெடரல் முறையே என்று உலகம் முழுவதும் கூறப்படுகிறது.

எனினும் தெற்கிலுள்ள அரசியல்வாதிகள், இது நாட்டை பிரிக்கும் முறை என்று கூறுகிறார்கள் என்றும் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அந்த அறிக்கையில் கூறிப்பிட்டுள்ளார்.