மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம்

268 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் திடீரென மத்தல விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அவசர விமான பயணம் ஒன்று மேற்கொள்வதற்காகவே மஹிந்த அங்கு சென்றுள்ளார். எனினும் அவர் எங்கு விஜயம் மேற்கொண்டார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இதன் போது அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களுடன் மஹிந்த கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் விமான நிலையத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஊழியர்களிடம், மஹிந்த கேட்டு தெரிந்து கொண்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஓடுபாதை நிர்மாணிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், நிலையத்தின் பணிநேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பிரதான விமான நிலையமாக மத்தல சர்வதேச விமான நிலையம் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.