மன்னார் கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு

273 0

மன்னாரில் இன்று நடத்தப்படவிருந்த கறுப்புக் கொடிப்போராட்டத்திற்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

இலங்கையின் 69வது சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் முழுமையாக புறக்கணிக்க வேண்டும் என மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இதற்கமைய, இன்று காலை மன்னாரில் இடம்பெறும் கறுப்புக் கொடி போராட்டத்தில் பங்கேற்றுகுமாறும் அழைப்பு விடுத்திருந்தது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்தது.

இந்த நிலையில், குறித்த கறுப்புக்கொடி போராட்டத்துகு;கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதாக மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.