வாழை தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா தோட்டம் – ஒருவர் கைது

Posted by - February 4, 2017

பண்டாரவெல – கொஸ்லந்த – உஸ்எல்ல பிரதேசத்தில் வாழை தோட்டம் என்ற போர்வையில், கஞ்சா தோட்டத்தை நடத்திச்சென்ற ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். காவற்துறையினருக்கு கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சுமார் அரை ஏக்கர் காணிப்பரப்பிலேயே இந்த கஞ்சா தோட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்டவரிடம் இருந்து மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் – சீ.வி விக்னேஸ்வரன்

Posted by - February 4, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிரதேசத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மக்களுக்கு எந்தவித இடையுறுகளும் விளைவிக்க வேண்டாம் என வடமாகான முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்பு மக்களால் தமது காணிகளை விடுவிக்கக்கோரி மேற்கொண்டுவரும் கவனயீர்பு போராட்டம் ஐந்தாவது நாளாகவும் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த மக்களுக்குச் சொந்தமான காணிகள் வான்ப்படையினர் வசமுள்ளதுடன் குறித்த காணியில் வசித்த மக்களை மீள்குடியேற்றத்;தின் போது கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில்; தங்கவைக்கப்பட்டனர். இந்தநிலையில், தமது காணிகளை விடுவித்துத் தங்களை சொந்தநிலங்களில் மீள்குடியேற்றமாறு

யுத்தத்தின் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளது – பெங்கமுவே நாலக தேரர்

Posted by - February 4, 2017

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன் பின்னர் நாட்டுக்கு கிடைத்த உண்மையான சுதத்திரத்தை தற்போதைய அரசாங்கம் இல்லாது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உரிமைகள் அமைப்பின் தேசிய இணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி எமக்கு முழுமையான சுதந்திரம் கிடைத்தது. ஆனால், அந்தச் சுதந்திரம் தற்போது பறிக்கப்பட்டுள்ளதாக பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 69வது சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம்

Posted by - February 4, 2017

நல்லிணக்கம் மற்றும் சமயங்களுக்கு இடையிலான சகவாழ்வின் ஊடாக நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சமூக அபிவிருத்தியை அடைய முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இடம்பெற்ற இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தேசிய ஒற்றுமை மற்றும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது. ஆனால், அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக குறுகிய நோக்கத்தைக் கொண்ட சில சந்தர்ப்பவாத சக்திகள் செயற்படுகின்றன.

இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்படமாட்டாது – இலங்கை அரசாங்கம்

Posted by - February 4, 2017

சட்டவிரோத மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மீள கையளிக்கப்பட மாட்டாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது கடற்றொழில் வளங்கள் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும் என இந்தியாவில் நீதிமன்ற உத்தரவொன்று பெறப்பட்டுள்ளது. அது தமக்கு அவசியமில்லை. தமது நாட்டு சட்டமே தமக்கு அவசியமாகும் என அவர் கூறியுள்ளார். சட்டவிரோத மீன்பிடியைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கைதுகள் மற்றும் படகுகள்

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் யாழ்ப்பாணத்தில்  ஆர்ப்பாட்ட பேரணி(காணொளி)

Posted by - February 4, 2017

இலங்கையின் சுதந்திர தினம், தமிழ் தேசிய மக்களின் துக்கதினம் என்ற தொனியின் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்னால் பொலிஸாரின் தடையையும் மீறி குறித்த பேரணி இடம்பெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில், ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய், கடத்தப்பட்டவர்கள் எங்கே, இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோசங்களை எழுப்பி

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி

Posted by - February 4, 2017

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலச்சர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 25 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளர். அத்துடன், அவர்களின் 119 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் எந்தவொரு கடற்றொழில் படகையும் மீளக் கையளிக்கவில்லை. படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த

எழுகதமிழும் எதிர்பார்ப்பும் !

Posted by - February 4, 2017

போர் நிறைவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. போரை கடந்தபின்னரும் தமிழர்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளை மறுத்தும் அதற்கான கோரிக்கைகளுக்கான அடிப்படைகளை அழிப்பதிலும் கவமாகவிருந்தது மகிந்த அரசு.

வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)

Posted by - February 4, 2017

வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள். வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து பேரணியாக சென்ற அப்பகு மக்கள் அதிலிருந்து 200மீற்றர் தொலைவிலுள்ள கண்டி வீதியிலுள்ள குறித்த மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு மாகாண