வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம்(காணொளி)

442 0

வவுனியா தேக்கவத்தை பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை இன்று நடாத்தினார்கள்.

வவுனியா தேக்கவத்தைப் பகுதியிலுள்ள மசாஜ் நிலையத்தை அவ்விடத்திலிருந்து அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா தேக்கவத்தை பகுதியிலுள்ள வவுனியா போக்குவரத்து பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலிருந்து பேரணியாக சென்ற அப்பகு மக்கள் அதிலிருந்து 200மீற்றர் தொலைவிலுள்ள கண்டி வீதியிலுள்ள குறித்த மசாஜ் நிலையத்தை அகற்றுமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ஜெயதிலக, நகரசபை செயலாளர் திரு.ஆர்.தயாபரன், வவுனியா மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி அமைப்பாளர் வாசல, வன்னி மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பட்டதாரிகள் சங்க இணைப்பாளர் திரு.ம.ஆனந்தராஜ், வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, கிராமசேவையாளர்கள், ஆகியோர் மேற்கொண்ட குழுவினர் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த மசாஜ் நிலையம் நகரசபையில் அனுமதியை பெறாது செயற்பட்டு வருவதாக தெரிவித்து நகரசபை செயலாளர் இன்றிலிருந்து அதனை நிறுத்துவதாகத் தெரிவித்துடன் திங்கட்கிழமை சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்வததாகத் தெரிவத்ததையடுத்து அப்பகுதி மக்கள் தமது ஆர்ப்பாட்டத்தினை கைவிட்டனர்.

குறித்த மசாஜ் நிலையமானது நேற்றிலிருந்து மூடப்பட்டுள்ளதுடன் அங்கு செயற்பாடுகள, விளம்பர காட்சிப்படுத்தல்; அனைத்தும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.