இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் – ஓ.பி

295 0

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலச்சர் ஓ. பன்னீர்செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

25 தமிழக மீனவர்கள் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளர்.

அத்துடன், அவர்களின் 119 படகுகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம் எந்தவொரு கடற்றொழில் படகையும் மீளக் கையளிக்கவில்லை.

படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இலங்கை தெரிவித்திருந்தது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என அந்தக்; கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.