வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா புதிய பேரூந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது. வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவையினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக வடபகுதிக்கான உள்ளூர் மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சேவை முழுமையாக பாதிப்படைந்துள்ளது. மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் உருவபொம்மைகள், எரிக்கப்படுவதை கண்டித்தும், வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை எரியூட்டப்பட்டதைக் கண்டித்தும், இலங்கை போக்குவரத்து சபையினரால் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்,

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம், இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 12.7  மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய நீர்ப்;பாசனத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர். இரணைமடு திட்டப்பணிப்பாளரும், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள பிரதி பணிப்பாளருமான

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில்..(காணொளி)

Posted by - February 9, 2017

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மூன்றாவது நிலையில் உள்ளதன் காரணமாக அபிவிருத்தியில் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவருவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் தமிழர்களின் இடங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விதவைகள், தபுதாரர்களுக்கான உடு புடவைத்துணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று மாலை நாவிதன் வெளி ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தில் அதன் தலைவர் என்.கௌசீகன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு(காணொளி)

Posted by - February 9, 2017

வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனின் உருவப்பொம்மை எரியூட்டப்பட்டதைக் கண்டித்தும், உருவப்பொம்மை எரித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், ஏனைய எட்டு மாகாணங்களைப் போன்று வட மாகாணத்திலும் இணைந்த நேர அட்டவணை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் வடபிராந்திய தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் தைதடியில் அமைந்துள்ள வடக்கு

ஆளுநரை சந்தித்தார் ஓ.பி.எஸ் – ஆளுநரை சந்திக்க உள்ளார் வி.கே.எஸ்

Posted by - February 9, 2017

தமிழகத்தின் ஆளுநரை, முதலமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வம் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். பின்னர், அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் நல்லது நடக்கும், தர்மம் வெல்லும் என குறிப்பிட்டார். இந்த நிலையில், மாலை 6.50 அளவில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்ற வி.கே சசிக்கலா, அங்கு வணக்கத்தில் ஈடுபட்டார். அ தனைத் தொடர்ந்து அவர் தற்போது ஆளுநரைச் சந்திக்க உள்ளார். இன்னும் சற்று நேரத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழக

கேப்பாப்புலவு மக்களின் காணி பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

Posted by - February 9, 2017

புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் குறித்த கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றுள்ளது.

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது- எஸ்.விஜயகுமார்(காணொளி)

Posted by - February 9, 2017

கிழக்கு எழுக தமிழ் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வர்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.விஜயகுமார் தெரிவித்தார். நாளை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள விவேகானந்தா விளையாட்டு மைதானத்தில் கிழக்கு எழுக தமிழ் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி மட்டக்களப்பு கல்லடி மணிக்கூண்டு கோபுரம் தொடக்கம் சிவானந்தா தேசிய பாடசாலை வரையில் சிவப்பு மஞ்சள் கொடிகள் வீதியெங்கும் நடப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டம்

Posted by - February 9, 2017

கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டத்திற் பங்குகொள்ளுமாறு உங்களையத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். கையெழுத்துப் போராட்டத்துக்கான இணையதளம் https://www.change.org/p/sri-lanka-srilankan-state-force-mu… —————————————————————————————— 2017ம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட ஏறுதழுவுதலுக்கான எழுச்சியோடு புரடசிகரமாகத் தொடங்கியது. தமிழகத்தில் எங்களின் தொப்புட்கொடி உறவுகளான தமிழகத் தமிழர்கள் தொடக்கிவைத்த எழுச்சி தமிழீழத்துக்குப் பரவியுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட நபர்களுக்காக வவுனியாவிற் தொடங்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம் முடிவடைந்திருப்பினும், தமிழீழத்தின் கேப்பாப்புலவிலும் மற்றும் புதுக்குடியிருப்பிலும் மக்கள் தங்களின் சொந்தக் காணிகளை இராணுவத்திடமிருந்து மீளப்பெற ஒரு போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறர்கள்.

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்!

Posted by - February 9, 2017

தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும் போராட்டங்கள் தொடர்பிலான பிணைப்பு அடிப்படையானது; அறுக்கவே முடியாதது.

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2017

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். மாகாணசபையின் 84ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில், முதலமைச்சர் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்கவேண்டும். குறிப்பாக பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து மாவட்ட செயலகத்தில் சந்திப்பை நடத்தவிருந்தார். இந்நிலையில்