இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

291 0

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள குறித்த அலுவலகம், இரணைமடு விவசாயிகளை வலுப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் 12.7  மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இரணைமடு பாரிய நீர்ப்பாசனத் திட்ட முகாமைத்துவ அலுவலகத்தினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் மற்றும் வடக்கு மாகாண விவசாய நீர்ப்;பாசனத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் இணைந்து உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இரணைமடு திட்டப்பணிப்பாளரும், கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்கள பிரதி பணிப்பாளருமான என்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள், திணைக்களங்களின் அதிகாரிகள், விவசாயிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.