யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

254 0

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மாகாணசபையின் 84ஆம் அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. இதன்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் குறிப்பிடுகையில்,

முதலமைச்சர் இந்த விடயத்தை கவனத்தில் எடுக்கவேண்டும். குறிப்பாக பாராளுமன்ற அலுவல்கள் சம்பந்தமான மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்து மாவட்ட செயலகத்தில் சந்திப்பை நடத்தவிருந்தார். இந்நிலையில் நாம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலாலிக்கு மாற்றப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டினார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் படையினருக்கு காணி வழங்குவது தொடர்பாக என்னிடம் கோரிக்கை வருகிறபோது அதனை நான் நிராகரித்திருக்கிறேன்.

இப்போது கொழுப்பில் இருந்து மாற்று வழியாக மேற்கொள்ளப்படுகின்றது. எனவே இந்த விடயம் தொடர்பாக ஆராய்வோம் என்றார்.