சசிகலாவுக்கு திருநாவுக்கரசர் ஆதரவு: மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு

Posted by - February 10, 2017

காங்கிரஸ் கட்சியின் ஆதரவை சசிகலா தரப்பினர் கேட்டதைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதா அல்லது சசிகலாவை ஆதரிப்பதா என்பதில் காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காவிட்டால், காங்கிரசின் 8 எம்.எல்.ஏ.க் களும் அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சி மறைமுகமாக ஆதரிப்பதால், காங்கிரஸ் கட்சி சசிகலாவை

ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஓ. பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

Posted by - February 10, 2017

தமிழக அரசின் நிதித்துறை, உள்துறைகளில் பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானதேசிகன். இவர் கடந்த 2011-14 ம் ஆண்டுகளில் மின்வாரிய தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு 2.12.14 அன்று தலைமை செயலாளராக ஞானதேசிகள் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 8-ந்தேதி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனராக திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி அவரை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டது. இதே போல் சுரங்க துறை கமி‌ஷனராக இருந்த

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.10 கோடி பேரம்?

Posted by - February 10, 2017

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் சிலர் பேரம் பேசத் தொடங்கி உள்ளார்களாம். “என்ன வேண்டும், செய்து தருகிறோம்” என்று பேரத்தைத் தொடங்கி உள்ளார்களாம். பெரும்பாலான எம்.எல். ஏ.க்கள் கிடைத்த வரை லாபம் என்ற மன நிலைக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஆதரவு அளிப்பதற்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறோம் என்று பேரம் பேசப்படுவதுதானாம். அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை தரப்படும் என்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் களுக்கு ஆசை காட்டப்பட்டுள்ளதாம். தமிழக அரசியல் வரலாற்றில் இத்தகைய பெரிய அளவில்

காங்கிரஸ் ஆதரவைப் பெற சசிகலா அணி முயற்சி

Posted by - February 10, 2017

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் தற்போது 5 பேர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கிறார்கள். அடுத்த வாரம் சசிகலாவுக்கு எதிரான வழக்கில் தண்டனை வழங்கப்பட்டால் மேலும் சில அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்வார்கள் என்று தெரிகிறது. அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சசிகலா தரப்பினர் ஆட்சி அமைக்க இயலாத அபாயம் ஏற்படும். அதைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்று சசிகலா ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது காங்கிரஸ் ஆதரவை கேட்டுப்பெறுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் ஆதரவை பெறும் தீவிர முயற்சிகளில்

அணி மாறத் தயாராகும் 30 எம்.எல்.ஏ.க்கள்

Posted by - February 10, 2017

அ.தி.மு.க.வில் தற்போது மொத்தம் 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களில் ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அணியில் 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். சசிகலா தரப்பில் தங்களிடம் 129 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சொல்கிறார்கள். சசிகலாவை ஆதரிக்கும் அந்த 129 எம்.எல்.ஏ.க்களில் 127 பேர் மகாபலிபுரம் அருகே கூவத்தூர் கிராமத்தில் இருக்கும் தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மூன்றாவது நாளாக அவர்கள் அங்கு இருக்கிறார்கள். இந்த நிலையில் சொகுசு விடுதியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட சசிகலா முதல்வர் ஆக வேண்டும் – விஜயசாந்தி

Posted by - February 10, 2017

தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. திரைஉலகை சேர்ந்தவர்களும் இருவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை லதா, ‘நன்றாக செயல்பட்ட ஓ. பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொன்னது உலகமே கேலிக்கூத்தாக தமிழ்நாட்டை பார்க்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் விஜய சாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுக்கு சசிகலாவுக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சசிகலாவுக்கே பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே, அரசியல் சட்டப்படி அவர் தான்

சசிகலா பதவி ஏற்க தடை கோரி மனு – அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

Posted by - February 10, 2017

சசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்து கோரிக்கையை நிராகரித்து விட்டனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஓ.பன்னீர் செல்வமும் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என்று அறிவித்துள்ளதால் கவர்னர் எடுக்கும் முடிவுதான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அவர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக திரள மாணவர்கள் புதிய திட்டமா?

Posted by - February 10, 2017

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2 மாதங்கள் கழித்து தமிழக அரசியல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதாக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்ததை தொடர்ந்து அ.தி.மு.க.வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவியை பறித்ததுடன் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக கூறி கவர்னரையும் சந்தித்தார். முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கவர்னரை சந்தித்தபோது தான் மிரட்டப்பட்டது பற்றியும், அரசியல்

டிரம்ப் விசா தடைக்கு 55 சதவீதம் ஐரோப்பியர் ஆதரவு

Posted by - February 10, 2017

அமெரிக்காவுக்குள் ஈரான், ஈராக் மற்றும் சிரியா உள்ளிட்ட 7 முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்கள் நுழைய 90 நாட்களுக்கு அதிபர் டிரம்ப் விசா தடை விதித்துள்ளார். அகதிகள் நுழைய 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிரம்பின் இத்தகைய நடவடிக்கை குறித்து ஐரோப்பா கண்டத்தின் பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, கிரிஸ், ஹங்கேரி, இத்தாலி. போலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் பேரில் ஆன்லைனில் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு 55 சதவீதம் பேர்

எம்.எல்.ஏ.க்களை மீட்கக் கோரிய வழக்கில் காவல்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு

Posted by - February 10, 2017

தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். மேலும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தையும் அளித்துள்ளார். ஆனால், சசிகலாவை ஆதரித்துள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம், கவர்னர் அழைக்கும்போது ஒன்றாக செல்வதற்கு வசதியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், எம்.எல்.ஏ.க்களை மீட்கக்கோரி உயர்நீதிமன்றத்தில்