ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஓ. பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

262 0

தமிழக அரசின் நிதித்துறை, உள்துறைகளில் பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஞானதேசிகன். இவர் கடந்த 2011-14 ம் ஆண்டுகளில் மின்வாரிய தலைவராக செயல்பட்டார்.

அதன்பிறகு 2.12.14 அன்று தலைமை செயலாளராக ஞானதேசிகள் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு கடந்த ஆண்டு ஜூன் 8-ந்தேதி தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழக மேலாண்மை இயக்குனராக திடீரென பணிமாற்றம் செய்யப்பட்டார்.

அந்த சமயத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி அவரை சஸ்பெண்டு செய்து அரசு உத்தரவிட்டது.

இதே போல் சுரங்க துறை கமி‌ஷனராக இருந்த அதுல் ஆனந்தும் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக பணி வழங்கப்படாமல் இருந்தது.

தற்போது முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இவர்கள் இருவரின் சஸ்பெண்டு உத்தரவை நீக்கி பணி நியமனம் வழங்கி உள்ளார்.

இதன் படி ஞானதேசிகன் அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனராகவும், அதுல்ஆனந்த் பிற்படுத்தப்பட்டோர் நலன் கமி‌ஷனராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் பணி நியமன ஆணை வழங்கியதற்காக முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இருவரும் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.