அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட சசிகலா முதல்வர் ஆக வேண்டும் – விஜயசாந்தி

252 0

தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.

திரைஉலகை சேர்ந்தவர்களும் இருவித கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். நடிகை லதா, ‘நன்றாக செயல்பட்ட ஓ. பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொன்னது உலகமே கேலிக்கூத்தாக தமிழ்நாட்டை பார்க்கும் நிலையை உருவாக்கி இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் விஜய சாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடுவுக்கு சசிகலாவுக்கு ஆதரவாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சசிகலாவுக்கே பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருக்கிறது. எனவே, அரசியல் சட்டப்படி அவர் தான் முதல் அமைச்சர் ஆக வேண்டும். எனவே அதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும்.

ஜெயலலிதா மரணத்தை வைத்து பன்னீர்செல்வம் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். இதை கவனத்தில் கொள்ள வேண்டும்இவ்வாறு விஜயசாந்தி கூறியுள்ளார்.