சைடம் பிரதானி வெளிநாடு சென்றார்…

Posted by - February 11, 2017

கடந்த 6ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி, மருத்துவர் சமீர சேனாரத்ன திடீரென வெளிநாடு சென்றுள்ளார். எமது செய்தி சேவை வினவிய போது, அவர் இன்று காலை ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று இரசாயனப் பகுப்பாய்வாளர் ஆய்வு செய்தார். மேலும் சமீர சேனாரத்ன சம்பவம் இடம்பெற்ற போது அணிந்திருந்த ஆடை, காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிரம்ப் உத்தரவு மீதான தடையை நீக்க முடியாது: அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு

Posted by - February 11, 2017

7 நாட்டினர் அமெரிக்கா வர தடை விதித்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு சியாட்டில் கோர்ட்டு தடை விதித்தது. இந்த தடையை நீக்க முடியாது என அப்பீல் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

7 ராணுவ வீரர்களை கொன்று, பெண் சிப்பாயை கடத்தி சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள்

Posted by - February 11, 2017

புதியதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு பெண் சிப்பாய் ஒருவரை போகோ ஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராணுவ முகாமுக்கு அருகே, புதிதாக பணியில் சேர்ந்த 7 ராணுவ  வீரர்களை போகோ ஹரம் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். மேலும் பெண் சிப்பாய் ஒருவரையும் தீவிரவாதிகள் கடத்திச்  சென்றுள்ளனர். இந்த தாக்குதலில் 20 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மைதுகிரிக்கு கிழக்கே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாஃபா

ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்

Posted by - February 11, 2017

சென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டம், ஆர்.கே.நகர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசீதா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, அவரது உடலில் பல்ஸ் எதுவும் கிடையாது. இறந்த நிலையில்தான் கொண்டு வந்தனர். அவரது உடலை பதப்படுத்தி பாதுகாக்கவே வெளிநாட்டு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. முதல்

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

Posted by - February 11, 2017

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியீடு

Posted by - February 11, 2017

திருப்பதி தேவஸ்தானத்தின் வரலாற்றுப் பின்னணி குறித்த புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது.2000 ஆண்டுகள் பழைமையான திருமலை திருப்பதி கோயில் பற்றிய கடந்த மற்றும் தற்போதைய அத்தியாயங்களை உடைய  புத்தகங்கள் இன்று வெளியிடப்பட உள்ளது.

நியூசிலாந்தில் இறந்த நிலையில் கரைஒதுங்கிய 400 திமிங்கலங்கள்

Posted by - February 11, 2017

நியூசிலாந்து கடற்பகுதியில் இறந்த நிலையில் சுமார் 400 திமிங்கலங்கள் கரைஒதுங்கியதால் கடல்வாழ் விலங்கின அமைப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் ஆதரவு

Posted by - February 11, 2017

ஓ.பன்னீர்செல்வத்திற்கு அகில இந்திய தேசிய லீக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பல்வேறு விரும்பதாக சம்பவங்கள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது.