ஜெயலலிதாவை சடலமாகத்தான் மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்

369 0

சென்னை மாவட்ட தீபா பேரவை ஆலோசனை கூட்டம், ஆர்.கே.நகர் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி தலைமையில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அப்போலோ மருத்துவமனை டாக்டர் ராமசீதா கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

முதல்வர் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, அவரது உடலில் பல்ஸ் எதுவும் கிடையாது. இறந்த நிலையில்தான் கொண்டு வந்தனர். அவரது உடலை பதப்படுத்தி பாதுகாக்கவே வெளிநாட்டு டாக்டர்கள் வரவழைக்கப்பட்டனர். ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முதல் மாடியில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர். எங்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்ததால் பலர் வேலையை ராஜினாமா செய்து விட்டனர். ஜெயலலிதா மரணத்தில் உண்மை கண்டறியும் வகையில் விசாரணை கமிஷன் அமைப்பதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவ்வாறு அமைத்தால் நாங்கள் உண்மையை தெரிவிப்போம் என்றார்.  நிகழ்ச்சியில் முரளிதரன் உள்பட தீபா பேரவையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.