ஈராக் இரட்டை குண்டுவெடிப்பில் 5 பேர் பலி: 19 பேர் படுகாயம்

255 0

ஈராக்கின் மொசூல் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் 5 பேர் பலியாகினர். 19 பேர் படுகாயமடைந்தனர்.

ஈராக்கின் மொசூல் நகருக்கு கிழக்கே உள்ள ராணுவ முகாம் மற்றும் உணவு விடுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 19 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மொசூல் நகரின் கிழக்கு பகுதியில் உள்ள சயிததி அல்-ஜமிலா உணவு விடுதியில் மதிய உணவு வேளையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேரும், அல்நூர் மாவட்டத்தில் நிகழ்ந்த மற்றொரு கார் குண்டுவெடிப்பில் ராணுவ வீரர் ஒருவரும்  உயிரிழந்தனர்.

மொசூல், அல்நூர் ஆகிய இரு மாவட்டங்களும் சில மாதங்களுக்கு முன்பு தான் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் ராணுவத்தால் மீட்கப்பட்டது.

இருநகரங்களும் மீட்கப்பட்ட பிறகு நடக்கும் இரண்டாவது குண்டுவெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பரில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பில் 23 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.