சைடம் பிரதானி வெளிநாடு சென்றார்…

252 0

கடந்த 6ஆம் திகதி துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி, மருத்துவர் சமீர சேனாரத்ன திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.

எமது செய்தி சேவை வினவிய போது, அவர் இன்று காலை ரஷ்யாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் நேற்று இரசாயனப் பகுப்பாய்வாளர் ஆய்வு செய்தார்.

மேலும் சமீர சேனாரத்ன சம்பவம் இடம்பெற்ற போது அணிந்திருந்த ஆடை, காவற்துறை பாதுகாப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.