தல பூட்டுவா யானை கொலை:வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்

Posted by - December 5, 2017

கல்கமுவை தல பூட்டுவா யானை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையும் வரை வனஜீவி திணைக்களத்தின் வடமேல் பிரிவின் பொறுப்பான பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். உடன் நடைமுறைக்கு வரும் வகையில் அவர் கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, கல்கமுவவில் தலப்பூட்டுவா யானை கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தமக்கும் தொடர்பு உள்ளது என உறுதிசெய்யப்பட்டால் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக வீடமைப்பு பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். தலப்பூட்டுவா யானை கொலை தொடர்பில் பிரதியமைச்சர் மீது சுமத்தப்படும்

வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கியினை முன்மொழிந்தார் முதலமைச்சர்

Posted by - December 5, 2017

2018ம் ஆண்டிற்கான வடமாகாணத்தின் ஒதுக்கீட்டு நியதிச்சட்ட அறிக்கை இன்று வடமாகாணசபையில் முதலமைச்சரினால் முன்மொழியப்பட்டது   வடமாகாணசபையின் நூற்றி பதினொராவது அமர்வு இன்று கைதடியிலுள்ள பேரவைச்செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது  இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாணத்தின் 2018ம் ஆண்டிற்கான நிதிக்கூற்று நியதிச்சட்ட அறிக்கியினை சபையில் முன்மொழிந்தார் மத்திய அரசாங்கத்தினால் வடமாகாணத்திற்கென பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இருபத்தாறாயிரத்து எழுநூற்று ஐம்பத்திநான்கு மில்லியன்  அறுபத்தாறாயிரம் ரூபா நிதியினை அவையில் முன்மொழிந்த முதலமைச்சர் அதற்கான எல்லைகள் தொடர்பிலும் சபையில் தெரிபுபடுத்தினார்.  இதன்

சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து இரு கைதிகள் தப்பிப்பு!

Posted by - December 5, 2017

யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்து வந்த இருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிப்பு வவுனியாவில் இன்று அதிகாலை சம்பவம் !2 மணி நேரத் தேடுதலின் பின் கைதாகினர் வவுனியா சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் தப்பித்தனர். எனினும் 2 மணிநேர தேடுதலின் பின்னர் அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் பிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப் பொருள்கள் அறையை

துன்னாலை இளைஞன் சுட்டுக்கொலை: பொலிஸார் இருவரும் பிணையில் விடுவிப்பு

Posted by - December 5, 2017

வடமராட்சி துன்னாலைப் பகுதியில் இளைஞன் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகிய இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. வடமராட்சி கிழக்கில் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த யோகராசா தினேஷ் (வயது -24) என்ற இளைஞன் கொல்லப்பட்டார். “ மணல் கடத்தலில் ஈடுபட்ட இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார். மணல் ஏற்றிய ஹண்டரைப் பொலிஸார் வழிமறித்தனர்.

நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளது – ரணில்

Posted by - December 5, 2017

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாத்துக் கொண்டு பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து அதனை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய கலாசார நிதியத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட வேலைத்திட்டதின் கீழ் 850 விகாரைகளுக்கான நிதியுதவி அளிக்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். அரசாங்கம் என்ற வகையில் இந்த நல்லாட்சியே விகாரைகளுக்கு அதிக நிதியுதவி அளித்துள்ளன. யுத்தத்தின் பின்னர் பொதுமக்களை ஒன்றிணைத்துக் கொண்டு

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

Posted by - December 5, 2017

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளல் மற்றும் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பில் முப்படைகள் மற்றும் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மாவட்ட செயலகத்தில் இன்று  நடைபெற்றதாக முல்லைத்தீவு மாட்டவ அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எச்.டி.காமினி பிரியந்த தெரிவித்துள்ளார் இது தொடர்பான ஊடகங்களுக்கான அறிவிப்பினை அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் இன்று அறிவித்துள்ளார். இலங்கையில்அடுத்து வரும் நாட்களில் ஏற்படப்போகும் சீரற்ற காலநிலை தொடர்பில் இலங்கை வானிலை அவதானிப்பு நிலையத்தினால் எதிர்வு கூறப்பட்டதற்கு அமைய அரசினால் அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக முல்லைத்தீவு மாவட்ட

வியாழனன்று அவசர அமைச்சரவைக்கூட்டம்

Posted by - December 5, 2017

அம்­பாந்­தோட்டை துறை­முகத்தை கைய­ளிப்­பது தொடர்பில் எதிர்­வரும் 7 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை அவ­சர அமைச்­ச­ரவை கூட்­ட­மொன்று நடத்­து­வ­தென கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­நேரம் குறித்த விசேட அமைச்­ச­ரவை கூட்­டத்­தினை அடுத்து தேவை­யேற்­படின் விசேட பாரா­ளு­மன்ற விவா­த­மொன்றை மறுநாள் 8ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை நடத்­து­வ­தற்கும் குறித்த கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் இணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்ற வளா­கத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை முற்­பகல் 11மணிக்கு நடை­பெற்ற கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்­தின்­போதே மேற்­கண்ட தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கூட்டம் குறித்து மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை கைய­ளிப்­பது

தொடர்ந்தும் சிவப்பு எச்­ச­ரிக்கை.!

Posted by - December 5, 2017

பதுளை மாவட்டத்தில்  பசறை மற்றும் ஹல்­துமுல்லை பிர­தே­சங்­க­ளுக்கு அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தால் விடுக்­கப்­பட்­டுள்ள சிவப்பு எச்­ச­ரிக்கை  தொடர்ந்தும்  நீடிக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. பசறை பிர­தே­சத்தில் 58 குடும்­பங்­களில் வாழும் குடி­யி­ருப்­புகள்  அனர்த்த எச்­ச­ரிக்­கைக்­குட்­பட்­டுள்­ளன.  தொட­ர்ந்தும் அதி­க­ளவு மழை பெய்து  ஏதேனும் அனர்த்த நிலை தென்­ப­டு­மாயின் இம் ­மக் ­கள்  பாது­காப்­பான இடங்­களை நோக்கி வெளி­யே­று­மாறும் கோர ப்­பட்­டுள்­ளனர்.  மண்­ச­ரிவு மற்றும் கற்­பா­றைகள் வீதியில் விழும் அபாயம் கார­ண­மாக பது­ளை–-­கொ­ழும்பு பிர­தான வீதியை பயன்­ப­டுத்தும் வாகன சார­திகள் ஹல்­து­முல்லை,

சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு கொழும்பில் ஆரம்பம்

Posted by - December 5, 2017

10 ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ‘அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்” என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று பண்­டா­ர­நா­யக்க  சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது.  எதிர்­வரும் 8ஆம் திகதி வரை  இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது. சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­துடன், சுற்­று­லாத்­து­றை­யினை நாடு­க­ளுக்­கி­டையில் வலு­வூட்­டு­வ­துமே  இம்­மா­நாட்டின் கருப்­பொ­ரு­ளாகக் காணப்­ப­டு­கின்­றது. 78 நாடு­க­ளினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 500 பிர­தி­நி­திகள் இம் மாநாட்டில் கலந்து கொள்­கின்­றனர். போக்­கு­வ­ரத்து  மற்றும் சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி

நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.!

Posted by - December 5, 2017

தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் ஏற்­பட்­டுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாட்டின் ஊடா­கவும் நாட்டைச் சுற்­றி­யுள்ள கரை­யோரப் பகு­தி­க­ளிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கு தென் கரை­யோ­ரப் ­ப­கு­தி­க­ளிலும்   நாளை முதல் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும்  என்றும் வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பிற்­பகல் 2 மணிக்கு பின்னர்