சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு கொழும்பில் ஆரம்பம்

268 0

10 ஆவது சர்­வ­தேச விமானப் போக்­கு­வ­ரத்து மாநாடு ‘அனை­வ­ருக்கும் ஆபத்­தற்ற ஆகாயம்” என்ற தொனிப்­பொ­ரு­ளுக்கு அமைய நேற்று பண்­டா­ர­நா­யக்க  சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் ஆரம்­ப­மா­னது.  எதிர்­வரும் 8ஆம் திகதி வரை  இந்த மாநாடு இடம்­பெ­ற­வுள்­ளது.

சர்­வ­தேச நாடு­க­ளுக்­கி­டையில் சிவில் விமா­னப்­போக்­கு­வ­ரத்து சேவை­யினைப் பலப்­ப­டுத்­து­வ­துடன், சுற்­று­லாத்­து­றை­யினை நாடு­க­ளுக்­கி­டையில் வலு­வூட்­டு­வ­துமே  இம்­மா­நாட்டின் கருப்­பொ­ரு­ளாகக் காணப்­ப­டு­கின்­றது. 78 நாடு­க­ளினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் 500 பிர­தி­நி­திகள் இம் மாநாட்டில் கலந்து கொள்­கின்­றனர்.

போக்­கு­வ­ரத்து  மற்றும் சிவில் விமான போக்­கு­வ­ரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்­வாவின் தலை­மையில் இம்­மா­நாடு இடம்­பெ­று­கின்­றது. சுற்­று­லாத்­துறை அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, அரச தொழில் மு­யற்சி அமைச்சர் கபீர் ஹாசிம், விமானப் போக்­கு­வ­ரத்து அமைச்சின் செய­லாளர் ஜி.எஸ்.விதா­னகே,இலங்கை சிவில் விமான சேவை அதி­கார சபையின் தலை­வர்­ ஆ­னந்த விம­ல­சேன மற்றும் சிவில் விமான சேவை நிறை­வேற்று பணிப்­பா­ளர்­ உட்­பட பிர­தான  நிறை­வேற்று அதி­காரி  எச்.எம்.சி. நிமல்­சிறி போன்ற முக்­கிய பிர­மு­கர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்­டனர்.

இதற்கு முன்னர் இம்மாநாடு தென்னாசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரில்  தாஜ்நட்சத்திர ஹோட்டலில் நடைபெற் றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment