நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.!

234 0

தெற்கு அந்­தமான் கடல் பகு­தியில் ஏற்­பட்­டுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு நிலை அதி­க­ரித்து வரு­வ­தாக வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது. இதன் கார­ண­மாக நாட்டின் ஊடா­கவும் நாட்டைச் சுற்­றி­யுள்ள கரை­யோரப் பகு­தி­க­ளிலும் குறிப்­பாக வடக்கு, கிழக்கு தென் கரை­யோ­ரப் ­ப­கு­தி­க­ளிலும்   நாளை முதல் காற்றின் வேகம் அதி­க­ரிக்கும்  என்றும் வளி­மண்­டல­வியல் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

வடக்கு, வட­மத்­திய, கிழக்கு மற்றும் ஊவா மாகா­ணங்­களில் மழை அல்­லது இடி­யுடன் கூடிய மழை பெய்யும். நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் மழை­யுடன் கூடிய கால­நிலை காணப்­படும். வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்­திய மாகா­ணங்­களில் அதி கூடிய மழை வீழ்ச்­சி­யாக 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்­கப்­ப­டு­வ­தாக வளிமண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

மேற்கு, சப்­ர­க­முவ, மற்றும் ஊவா மாகா­ணங்­க­ளிலும் அம்­பாறை, மட்­டக்­க­ளப்பு ஆகிய மாவட்­டங்­க­ளிலும் காற்றின் வேக­மா­னது மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் எனவும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதேவேளை பொத்­து­வி­லிலி­ருந்து திரு­கோ­ண­மலை ஊடாக காங்­கேசன் துறை வரை­யி­லான கடற் கரை­யோரப் பிர­தே­சங்­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்­வ­தோடு அச்­சந்­தர்ப்பத்தில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக் கூடும். எனவே மக்கள் மிகுந்த அவ தானத்துடன் செயற்படுமாறு அறிவு றுத்தப்பட்டுள்ளனர்.

Leave a comment