பணம் கேட்டுப் பயமுறுத்திய மூவர் கைது!

258 0

பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த ஒருவரிடம், தொலைபேசி மூலம் பணம் கேட்டு மிரட்டிய நபரை கொட்டாவையில் வைத்து பொலிஸார் சற்றுமுன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பொரளையைச் சேர்ந்த நாற்பது வயதுக்காரர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குருணாகலையைச் சேர்ந்த நபரொருவரைக் கடத்தி சுமார் நான்கு இலட்ச ரூபாவைக் கப்பமாகக் கேட்ட இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்தனர்.

கைதான இரு இளைஞர்களும் பொல்பித்திகமையைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் கூறினர்.

Leave a comment