அதிவேக வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

279 0

சீரற்ற கால­நிலை இன்னும் சில தினங்­க­ளுக்கு தொட­ரு­மென வளி­மண்­ட­ல­வியல் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. அத்­துடன் மழை­வீழ்ச்சி அதி­க­ரிக்­கும்­போது காற்றின் வேகம் மேலும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும் எனவும் அத்­தி­ணைக்­களம் எதிர்­வு­ கூ­றி­யுள்­ளது.

இந்நிலையில்,  அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், வாகனங்களுக்கிடையில் சுமார் 50 மீற்றர் அளவில் இடைவெளியை பேணுமாறு அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வாகனத்தின் முன்பக்க விளக்கை எரிய விட்டு வாகனத்தை செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

Leave a comment