கேப்பாப்புலவில் மிகுதியாக உள்ள 111 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு 148 மில்லியன் ரூபா இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க டிசம்பர் மாதத்திற்குள் இந்தக் காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்