இந்திய மீனவர்கள் கைது

247 0

இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் ஐந்து பேர், இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவர்கள் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தற்போது இலங்கையில் 47 இந்திய மீனவர்கள் தடுப்பில் உள்ளனர்.

இதேவேளை, நாளையதினம் டெல்லியில் இந்திய- இலங்கை கூட்டுக் கடற்றொழில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இதற்காக மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையிலான உயர்மட்டக் குழு ஒன்று இன்று இந்தியா செல்லவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment