பொலித்தீன் தடைக்கு 95 வீதமானர்வகள் விருப்பம்

234 0

பொலித்தீன் தடைக்கு 95 வீதமான பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபை நடத்திய ஆய்வொன்றின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மதம் முதலாம் திகதி பொலித்தீனை தடை செய்தது முதல் 6 வாரங்களாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த ஆய்வை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது

Leave a comment