புதையல் தோண்டிய 9 பேர் கைது

364 0

ஹபரனை, பலுகஸ்வெவ காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹபரனை பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து நடத்திய சோதனையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதையல் தோண்ட பயன்படுத்திய பெகோ இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட நபர்கள் ஹபரனை, தம்புள்ளை, கந்தளாய், இனாமலுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை ஹபரனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment