ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

217 0

6 மாத காலத்திற்கு முன்பு பெண்ணொருவருக்கு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புபட்ட ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தின் விசேட விசாரணை பிரிவு மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி இன்று நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment