ஈழ ஏதிலிகள் நவுறு தீவுக்கு இடமாறுவதற்கு அனுமதி

224 0

அவுஸ்திரேலியாவினால், பப்புவா நியுகினிக்கு சொந்தமான மானஸ்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ ஏதிலிகள் உள்ளிட்டவர்கள், நவுறு தீவுக்கு இடமாறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு மாத்திரமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறித்த முகாம் இந்த மாதத்துடன் மூடப்பட வேண்டும் என்று பப்புவா நியுகினியின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த முகாமில் உள்ள ஏதிலிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்னதாக அங்குள்ள ஏதிலிகள் முகாம் மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேணடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Leave a comment