ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன

436 0

693377182Untitled-1ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக லக்ஷ்மன் யாபா அபேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் தற்போதைய நிதி இராஜாங்க அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்தார்.

இந்தநிலையில் அவர், தான் பதவி விலகுவதாக கடந்த 19ம் திகதி அறிவித்த நிலையில், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் யாபா நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.