வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன்!

355 0

nadaiஇன்று கிளிநொச்சியிலிருந்து நடைபெறும் நடைபயணத்தில் சிறுவர்கள் முதியவர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.இதனை வாகனத்தில் அமர்ந்தவாறு நடைபயணத்தில் இணைந்துகொண்ட சிறிதரன் தலைமைதாங்குவதாக இடைவிடாது ஒலிபெருக்கியில் அறிவித்தமை பங்குகொண்டவர்களை விசனப்பட வைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு பற்றி சமூகவலை தளத்தில் ஒருவரின் ஆதங்கம் வருமாறு:

65- 75 வயதுடைய முதியவர்களும் பெண்களும் ‘நடைபயணத்தில்’ நடக்க கிளிநொச்சியின் ‘சின்னக்கவுண்டர்’ வாகனத்தில் பவனிவர வெட்கமே இல்லாமல் ‘சிறிதரன் தலைமையில் நடைபயணம் என முச்சக்கர வண்டியில் ஒலிபெருக்க’ தொடர்கிறது சிறிதரன் இயக்கி நடிக்கும் ‘நானும் ரவுடிதான்’ வீதி நாடகம்.