எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் விளம்பர தூதராக

348 0

607324528Untitled-1பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் மகளிர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான விளம்பர தூதராக ஜெயந்தி குருஉதும்பலவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற அவரது சாதனையை கௌரவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி இவ் வருடம் ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் திகதி வரை இவருக்கு இந்தப் பதவி வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் 24ம் திகதி இந்த நியமனம் உத்தியோகபூர்வமாக, ஜெயந்தி குருஉதும்பலவுக்கு, அமைச்சர் சந்திரானி பண்டாரவால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.