ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெங்கடாசலபதி ஆலயத்தில்

286 0

1471766221_262892_hirunews_63853645ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்திற்கான விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலயத்திற்கு வருகை தந்ததை ஆந்திர மாநில அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
நேற்றுமுன்தினம் இரவு திருமலையில் தங்கிய அவர் நேற்று அதிகாலையில் மலைக்கோயில் ஒன்றில் இடம்பெற்ற வழிபாட்டு நிகழ்வுகளிலும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த விஜயத்தின் போது ஆந்திர பிரதேச காவல்துறையினர் பலத்த பாதுகாப்பினை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.