தலைமன்னாரில் 4 லட்சம் பெறுமதியான கஞ்சா மீட்பு

298 0

23-7-2016 16.7.34 3தலைமன்னார் சுவாமித்தோட்டம் பகுதியில் சுமார் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகளை மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் நிறை சுமார் 4 கிலோகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மன்னார் நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.