திட்டமிட்டே இடைநீக்கம் செய்துள்ளனர் – மு.க.ஸ்டாலின்

338 0

stalin_2975565fசட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்களை திட்டமிட்டே இடைநீக்கம் செய்துள்ளனர் என்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
தற்போது என் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவைக்குள் செல்ல முடியாதபடி, திமுக உறுப்பினர்களை சபாநாயகர் இடைநீக்கம் செய்துள்ளார்.
திங்கள்கிழமை (இன்று) காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடக்க இருக்கிறது.
காவல்துறை முதல்வரின் பொறுப்பில் உள்ளது.
எனவேதான் திட்டமிட்டு பிரச்சினையை கிளப்பி, சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்கி உள்ளனர். இது ஒரு சர்வாதிகாரப் போக்கு எனவும் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.